"நான் மேயர் ஆல்ஃப்ரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றுவிட்டேன்.
இனி மக்களுக்கான சுதந்திரப் பாதையில்தான் என் கால்கள் பயணிக்கும்.
உங்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் நான் ஒரு ஒருபோதும் பயன்படமாட்டேன். எனது பாதை வேறு; லட்சியமும் வேறு''
என அந்த 21 வயது இளைஞன் தன் பெற்றோரிடம் சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான்.
மகனின் வார்த்தையைக் கேட்ட அந்தப் பெற்றோரோ அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
வீடு தேடி வந்த பெரும் காவல் படையோ, ''எங்கே உங்கள் மகன்? அவன் வீட்டுக்கு வந்தால் எங்களிடம் மரியாதையாக ஒப்படைத்து விடுங்கள்''
என்று மிரட்டினர்.
21 வயதில் மக்களின் சுதந்திரத்துக்காக அப்படியொரு புரட்சிகர முடிவை எடுத்த அந்த இளைஞன்தான் பின்னாட்களில்,
'தமிழீழ தேசிய தலைவர்' என உலகத்தாரால் போற்றிப் புகழப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன்! அவரது பிறந்த தினம் 26 நவம்பர்
அவருடைய சிறு வயதில் ஒரு ராணுவ வீரன், ஒரு முதியவரை ரத்தம் பீறிட்டு வருவதையும் பொருட்படுத்தாமல் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த பிரபாகரன், தன் தந்தையிடம் ''ஏன்? இப்படி துன்புறுத்துகிறார்?'' என்று கேட்டார்.
அவரது தந்தையோ, ''நாம் ஒன்றும் செய்ய முடியாது? நம்மிடம் ஒன்றுமே இல்லை.
ஆனால், அவர்களிடமோ ராணுவ பலமும் அதிகார பலமும் இருக்கிறது'' என்றார்.
உடனே பிரபாகரன், "இதே ராணுவ பலத்தோடு இவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன்" என்றார் சட்டென்று.
சொன்னதுபோலவே, இலங்கை அரசப் படைக்கு எதிராக விடுதலைப் புலிகள் எனும் ராணுவக் கட்டமைப்பை உருவாக்கி
உலகத் தமிழருக்கான தமிழீழ தேசத்தைக் கட்டிக் காத்தார்.
அந்த வயதில் மக்கள் மீது இப்படியோரு பற்ற என்று வியந்து போனேன்.
என் கருத்து - இன்றைக்கு இந்தியாவில் துக்ளக் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
கோடிக்கணக்கான மக்கள் மோடியின் திட்டத்தால் நடுதெருவில் நின்று தவிக்கிறார்கள்.
போராட ஒருவனும் வரவில்லையே.
எப்படி வர முடியும். ஏழை - அன்னிகு உழைச்சா தான், அன்னிக்கு சோறு.
பணக்காரனுக்கு எதை பற்றியும் கவலையில்லை.
நடுத்தரவர்க்கம் கை நிறை சம்பாதிச்சாலும், கடன் காரனா தான் சுத்திட்டு இருப்பான். வீடு லோன், கார் லோன் அப்படினு கழுத்து வரை லோன்.
அவன் எப்படி வீதியில் இறங்கி போராட முடியும்.
இன்னொரு சம்பவம்:
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த காலத்தில்,
ஒரு வேதியியல் பொறியியலாளர் பிரபாகரனைச் சந்தித்து "நீங்கள் பயன்படுத்தும் வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளில்
மயக்க மருந்தையும் கலந்து வெடிக்கச் செய்தால், எதிரிகள் இறப்பதோடு மட்டுமல்லாமல், தப்பித்துச் செல்ல நினைக்கும் எதிரிகளும் மயக்கம்
அடைந்து விடுவார்கள். இதனால், நாம் அனைத்து எதிரிகளையும் மிக எளிதாக அழிக்கலாம்" என்று ஆலோசனை தந்தார். இதனைக் கேட்டு கடும்
கோபம் கொண்ட பிரபாகரன், ''இது கோழையின் செயல். நேருக்கு நேர் நின்று எதிரிகளோடு சண்டையிடுபவர்கள்தான் விடுதலைப் புலிகள்.
இது உலகப் போர் நெறிகளுக்கு எதிரானது. யுத்த நியதிகளை புலிகள் ஒருபோதும் மீறமாட்டார்கள்'' என்று உறுதியாகப் பதிலுரைத்தார்.
இன்னொரு சம்பவம்:
தமிழகத்தில் புலிகளுக்கு எதிராகத் தடை விதிக்கப்பட்டிருந்த நேரம் அது. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தளபதி ரகு,
பல்வேறு தடைகளையும் தாண்டி தமிழகத்திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஆயுதங்களைக் கொண்டு வந்து சேர்த்தார்.
''போலீஸ் சோதனைகள் நிறைய இருந்திருக்குமே.... எப்படித் தப்பித்து வந்தாய்?'' எனக் கேட்டார் பிரபாகரன்.
"நம்முடைய ஆயுத வாகனத்தை ஆம்புலன்ஸ் வாகனம் போல் மாற்றி அமைத்து கொண்டு வந்தேன்" எனக் கூறினார். சட்டென கோபமடைந்த பிரபாகரன்,
''ஆம்புலன்ஸ் என்பது மனிதர்களின் உயிரைக் காக்கும் வாகனம். புனிதமான அந்த வாகன சின்னத்தைப் பயன்படுத்தி ஆயுதங்களை ஏன் எடுத்து வந்தாய்?
இதுமாதிரி செயல்களுக்கு இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்'' என்று கடுமையாக எச்சரித்தார்.
இன்னொரு சம்பவம்:
இறுதிகட்டப் போரில், பிரபாகரனோடு நேருக்கு நேர் யுத்தம் புரிந்த இலங்கை ராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே பிரபாகரனைப்
பற்றிக் கூறிய வரிகள் இவை : "பிரபாகரன் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்கத்தை
கடைப்பிடித்தே வாழ்ந்து வந்தார். பெண்களுக்கு மரியாதையையும்,பாதுகாப்பையும் கொடுத்தவர். விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து சுமார் பத்தாயிரத்துக்கும்
மேற்ப்பட்ட புகைப்படங்களை இலங்கை
ராணுவத்தினர் கைப்பற்றினர். அவற்றில் ஒரு புகைப்படத்தில் கூட, மதுக் கோப்பையுடனோ அல்லது சிகரெட் பிடித்த நிலையிலோ பிரபாகரன் இருப்பது
போன்ற புகைப்படங்கள் இல்லை. அவர் ஒரு ஒழுக்கமானத் தலைவராக இருந்தார். அனைவரும் கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தன." என்றார்.
இன்னிக்கு நாலு காசு கையில் சேர்ந்தாலே மது, மாது என்று ஆயிரம் கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்கள் இருக்கிறார்கள்.
பிரபாகரன் இயக்கத்தில் கோடி கணக்கில் பணம் புழங்கியது. இருந்தாலும் ஒழுக்கமாய் வாழ்ந்தது வியக்க வைக்கும் பண்பாக இருக்கிறது.
Saturday, November 26, 2016
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்கையின் மெய்சிலிர்க்கும் தருணங்கள்
Tags
Politics#
அரசியல்#
Share This
About Nambikkai Kannan
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
No comments:
Post a Comment