Saturday, December 30, 2017

கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா?

நினைத்தது நடக்குமா? கேட்டது கிடைக்குமா? நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.
நிச்சயம் இது சாத்தியம் தான். இந்த பிரபஞ்சம் உங்களுக்காக தான் வேலை செய்கிறது. நீங்கள் ஒன்றை ஆழமாக ஆணித்தரமாக கேட்டு விட்டால், எப்படியாவது அந்த பிரபஞ்சம் அதை உங்களுக்கு கொடுக்கும். அது தான் பிரபஞ்ச ரகசியம். இந்த ரகசியத்தை சரியாக பயன்படுத்தியவர்கள் வாழ்க்கையில் சாதிக்கிறார்கள்.
வெற்றி மேல் வெற்றிகளை குவிக்கிறார்கள். இது தான் பிரபஞ்ச ஈர்ப்பு விதி.

நம் மனதில் இருக்கும் எண்ணங்கள் தான் செயல்களாய் மாறும்.
நாம் என்ன அதிகமாக நினைக்கிறோமோ, அதை தான் இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுக்கும். நாம் என்ன அதிகமாக பேசுகிறோமோ, அதை தான் இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுக்கும்.
நாம் அதிகளவில் புலம்பி கொண்டிருந்தால், நம்மை இன்னும் அதிகளவில் புலம்ப வைக்கும் சூழ்நிலைகளை தான் அந்த பிரபஞ்சம் கொடுக்கும். எனவே எண்ணங்களை  முறைப்படுத்துங்கள். பிரபஞ்ச ரகசியத்தை முழுமையாக பயன்படுத்த முதலில் உங்கள் எண்ணங்களை செம்மைப்படுத்த வேண்டும். சிறப்பாக்க வேண்டும். இப்படி செய்தால், நீங்கள் கண்டிப்பாக சாதிக்கலாம். பணக்காரர் ஆக முடியும். நீங்கள் விரும்பிய மகிழ்ச்சியான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். தவறாமல் இந்த வீடியோவை பாருங்க. பலன் அடையுங்க.
நண்பர்களுக்கும் பகிருங்க.


மறக்காம எங்களின் பேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்க, யுடியுப் சானலை subscribe பண்ணுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

1 comment:

  1. அருமை .. எனக்கு எது வேண்டும் அல்லது என்னுடைய நெடு நாளைய வாழ்க்கைக்கு எது நல்லது என்று தீர்மானிக்கும் என்னிடம் இருக்குதா? என்று தெரியவில்லை.

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot