Sunday, November 20, 2016

500,1000 ரூபாய் - அரசியல்வாதிகளுக்கு முன்னாடியே தெரியும்

10ந் தேதி ஹிந்து தமிழ் பத்திரிகையை படியுங்கள்.
ஒரு ஆடிட்டர் சொல்கிறார் - ஒரு மாதத்திற்கு முன், செல்வந்தர் ஒருவர் தன்னிடம் வந்து, ஒரு லட்ச ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் இருக்கிறது.
அதை மாற்றிக் கொடுங்கள். 25% சதவீதம் கமிசன் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
மோடி அரசாங்கம் எல்லாமே ரகசியமாக வைக்கப்பட்டது என்றாரே, இந்த செல்வந்தருக்கு எப்படி தெரிந்தது?


Modi announced #DeMonetisation on 8 Nov.
Sanjeev Kamboj, Co-Convener BJP Law & Legal Affairs Department Punjab announced it on 6 Nov, 2016.

பஞசாபின் பிஜேபியில் துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சஞ்சீவ் கம்ப்போஜ் என்பவர் 6ந்தேதி நவம்பர் அன்று ஒரு டீவிட் செய்கிறார்.
ரிசர்வ் வங்கி விரைவில் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடும் என்று கூறினார்.
அவர் கையில் 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.
அது specimen காப்பி அல்ல அது சீரியல் நம்பர் தெரிகிற உண்மையான நோட்டுகள்.
எப்படி அவர் கையில் 6ந் தேதியே 2000 ரூபாய் நோட்டுகள் கையில் வந்தது.

500, 1000 ரூபாய் செல்லாது, புது 2000 ரூபாய் வரப்போகுது என்று அரசியல்வாதிகளுக்கும் தெரிந்திருக்கு, செல்வந்தர்களுக்கும் தெரிந்திருக்கு.
பாமரனுக்கு மட்டும் தான் தெரியவில்லை.
பாமரனின் வயிற்றில் அடிக்க தான் இந்த திட்டம்.
ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் வெளிநாட்டில் இருக்கும் 75 லட்சம் கறுப்பு பணத்தை மீட்பேன் என்று கர்ஜனை செய்தார் மோடி.
2.5 வருடங்கள் ஓடி போனது. ஒன்றும் செய்யவில்லை. அதை மறைக்கவே இந்த திசைதிருப்பும் நாடகம்.

எவ்வளவு பேர், மண்ணை எடுத்து தூவி சாபம் விடறாங்க தெரியுமா?
உங்களுக்கு எப்படி தெரியும். நீங்க தான் ஜப்பான் போயிட்டிங்களே.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot