Tuesday, November 22, 2016

மோடியின் அடுத்த இரண்டு அதிரடிகள் என்ன?

Topic 1: மோடியின் அடுத்த அதிரடிகள்
--------
Next two attacks against black money?|அடுத்த இரண்டு அதிரடிகள் என்ன?

விரைவில் தங்கத்தையும் ஏப்பம் விட போகும் மோடி:
1) திடிரென்று ஒரு நாள், இன்று இரவு முதல் உங்களிடம் உள்ள தங்கம் எதுவும் செல்லாது என்று பிரதமர் சொல்ல போகிறார்.
  ஒரு மாதத்தில் வங்கிக்கு கொண்டு வந்து பார் கோட் பொதித்து செல்ல வேண்டும். அந்த விவரங்கள் ஆதார் அட்டையில் இணைத்து விடுவார்கள்.
  பார் கோல்ட், நகைகள் அனைத்திலும் பார் கோட் பொதிக்கப்படும்.
  ஒரு மாதத்திற்கு பின், பார்கோட் பொதித்து கொள்ளாத தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டால் நாட்டு உடைமை ஆக்கப்படும்.
  ஒரு அளவிற்கு மேல் தங்கம் வைத்திருக்கும் போது வரி கட்டவும் சொல்ல போகிறார் பிரதமர்.

  தங்கத்தை உருக்கும் நகைக்கடைகள் மற்றும் பொற்கொல்லர்கள் தங்கத்தை உருக்குவதற்கு முன், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
  அரசாங்கத்திற்கு தெரியாமல் தங்கத்தை உருக்க முடியாது.
  அப்படி சொல்லாமல் உருக்கினால், ஐந்து நிமிடங்களில் காவல்துறை அங்கு இருக்கும்.

   இந்தியா முழுக்க எவ்வளவு தங்கம் இருக்கிறது, யாரிடம் எவ்வளவு இருக்கிறது என்று முழு விவரம் அரசாங்கத்திடம் இருக்கும்.

  பணம் மாற்றும் விவகாரத்தில் இரண்டாயிரம் ரூபாய் வைக்க ஏடிஏம் இல் வசதி செய்யாமலே திட்டத்தை அறிவித்து விட்டார்கள்.
  வங்கிகளில் பார் கோட் பொதிக்கும் கருவிகளின் மென்பொருள் அனைத்து வங்கியின் கணனியிலும் பொருந்தாவிட்டால், மக்களுக்கு திண்டாட்டம் தான்.

அதே போல்
1) திடிரென்று ஒரு நாள், இன்று இரவு முதல் உங்கள் வீடுகளையும், நிலத்தையும் விற்க முடியாது.
  ஆதார் எண்ணுடன் உங்கள் சொத்துகளை இணைத்த பிறகே விற்க இயலும் என்று சொல்ல போகிறார்.
  சொத்தை எப்படி வாங்குனீற்கள், வருமானம் எப்படி வந்தது என்று வாட்டி எடுக்க போகிறார்கள்.
 
  பணம் மாற்று விவகாரத்தில் பெரிய முதலைகளை எப்படி மோடி தப்பிக்க வைத்தாரோ, அது போல் இதிலும் தப்பிக்க வைப்பார்.
  அவர்கள் எல்லாரும் தங்களின் சொத்துகளை தங்கள் நிறுவனங்களின் பேரிலோ, பினாமியின் நிறுவனங்களின் பேரிலோ மாற்றி விடுவார்கள்.
  நிறுவனங்களுக்கு பிரச்சனை இருக்காது. அம்பானி, அதானியை காப்பாத்தனும்ல?

  தகுந்த சான்றுகள் கொடுக்காத ஏழை மக்கள் பாதிப்படைவார்கள்.
  அவர்களில் சொத்துகளை அரசு எடுத்துக் கொள்ளும்.
  மேலும், ஒருவர் பெயரில் இரண்டு விடுகளுக்கு மேல் இருந்தால், அது நாட்டு உடைமை ஆக்கப்படும்.
  நேர்மையாக செயல்படுத்தினால், கள்ள ரயில் ஏறி வந்த கலைஞரிடம் இருந்து பல ஆயிரம் கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.
  நடிகையாக இருந்து , பின் ஒரு ரூபாய் சம்பளம் பெறும் ஜெயலலிதாவிடம் இருந்தும் பல கோடி சொத்துகள் பறிமுதல் செய்ய்படும்.

மோடி பக்தர்கள் மோடி அத பண்ணப்போறார், இத பண்ணப்போறார் என்று விதவிதமாய் செய்திகளை கிளப்பி விடுகிறார்கள்.
அவர்களுக்கு உதவியாய் என்னுடைய சிறிய பங்களிப்பு.



தேர்தல் தொடர்பான மாற்றம்:
தேர்தலின் முன் கொடுத்த வாக்குறுதிகளை, 5 ஆண்டிற்குள் நிறைவேற்றாவிட்டால், அந்த நபர்
மறுபடியும் தேர்தலில் நிற்கவே முடியாது. இதை மோடி செய்தால், நான் youtube இல் இனிமேல் ஒரு வீடியோ கூட upload
செய்ய மாட்டேன்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot