Friday, April 7, 2017

ஜெயலலிதாவின் ஆன்மாவை கதறி அழ வைத்த பன்னீர்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பது பெரும்பாலான
ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் கருத்தாக இருக்கிறது. அவர்கள் சசிகலா மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதை தான் அனைத்து கருத்துக் கணிப்புகளின் முடிவுகளும் காட்டுகிறது.

இதை முன்னிறுத்தியே பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார். ஜெயலலிதா இறந்த பிறகு இரண்டு மாதங்கள் இவர் தான முதலமைச்சரா இருந்தார், அப்ப என்னகோமாவிலா இருந்தார் என்ற கேள்வியை கூட  ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கேட்கவில்லை. அந்த அளவிற்கு பன்னீரின் நடிப்பு ஆபாரமாய் இருந்தது. தன் நடிப்பின் மூலமாய் மக்களை தன் வசப்படுத்தி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி மக்கள் ஆதரவு பன்னீருக்கு இருந்தாலும், தினகரனிடம் பணத்தை பெற்று விட்டால் மக்கள் அவருக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்பது பன்னீருக்கு தெரியும். ஏனெனில், அதிமுக உடையாம இருந்திருந்தால், இந்நேரம் பன்னீர் தான் பண வினியோகம் செய்து கொண்டிருப்பார். மக்களின் நேர்மையை பற்றி அவருக்கு நல்லாவே தெரியும். சத்தியம் செஞ்சி காசு வாங்கிட்டா, மக்கள் சரியாக ஓட்டு போட்டுடுவாங்கனு அவருக்கு நல்லாவே தெரியும். பன்னீரின் நடுக்கத்திற்கு இப்போது அது தான் காரணம்.

தினகரன் செய்யும் பண அரசியலுக்கு எதிராக பன்னீர் இப்போது என்ன அரசியல் செய்றார் தெரியுமா? பிண அரசியல். இந்த போட்டோவை பாருங்க. ஜெயலலிதாவின் சவ பெட்டி மாதிரியை ஜிப்பில் வைத்து விதி விதியாய் போய் ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் மீது தேச கொடியை வேற போற்றி வைச்சிருக்காங்க. பிஜேபி காரங்களா எங்கப்பா இருக்கீங்க? இது தேச விரோத செயலானு கொஞ்சம் பாருங்கப்பா. இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே.

ஆர்.கே.நகர் தொகுதியில் எகப்பட்ட பிரச்சனைகள் இருக்கு. அதை பற்றி எல்லாம் இவங்களுக்கு கவலை இல்லை.

தினகரன் பணத்தை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறார். பன்னீர் பிணத்தை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறார். இவர்கள் இருவருமே மக்களை பற்றி என்றைக்குமே கவலைப்பட்டதில்லை. இனியும் கவலைப்பட மாட்டார்கள்.

இறந்த பிறகும் ஜெயலலிதாவை நிம்மதியாவே வட மாட்டாங்க போல இருக்கே. எப்ப பார்த்தாலும் தியானம் பண்றேன்னு யாராவது வந்துடுவாங்க. இப்ப அடக்கம் செஞ்ச உடலை, மீண்டும் தெரு தெருவா சுத்திக்கிட்டு திரியறாங்க. இதை எல்லாம் அந்த ஆத்மா பார்த்தா எவ்வளவு வருத்தப்படும். நான் வளர்த்து விட்ட ஆள். என்னால் பல்லாயிரம் கோடி சேர்த்த ஆள். இன்னிக்கு என் பிணத்தை விதி விதியாக இழுத்துட்டு போறானேனு அந்த ஆத்மா கேள்வி கேட்குமே. பன்னீரு உண்மையாவே ஆன்மாவிடம் பேசியிருந்தால் இது தெரிந்திருக்கும். ஆனா, அவரோ ஆன்மா கிட்டே பேசறேன்னு சொல்லிட்டு பிஜேபிகாரங்க கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்காறு.

சொந்த காசில் சூனியம் வைச்ச மாதிரி ஆயிடுச்சு பன்னீர் கதை
மக்களிடம் அனுதாப ஓட்டுகளை வாங்குவதற்கு செய்த சவப்பெட்டி பிரச்சாரம் மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot