Sunday, April 2, 2017

யாரும் செய்ய துணியாத ஒன்றை செய்த இஸ்லாமியர்

சமீபத்தில் வாட்ஸ்ஆப்பில் ஒரு வீடியோ பார்த்தேன். மனதை நெகிழ வச்சிது. நீங்களும் பார்த்து இருப்பீங்க. பாக்காதவங்க கண்டிப்பா பாக்கனும்னு தான் அந்த வீடியோவை நான் யூடியுப்பில் போடறேன்.
வீடியோ ஆங்கிலத்தில் இருக்கு. இறுதியில் தமிழில் சுருக்கமா சொல்றேன்.

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கர் ஒருவர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு முஸ்லிம்களை வேட்டை ஆட கிளம்பினார். இருவரை கொன்றார். மூன்றாவதாக அந்த முஸ்லிம் வாலிபரின் முகத்தில் சுட்டார். பலத்த காயம் அடைந்த அவர் அதிர்ஷ்டவசமாக பிழைத்து கொண்டார்.

அந்த அமெரிக்கருக்கு தூக்கு தண்டனை வழங்கபடுகிறது.
பழிக்கு பழி என்று இல்லாமல் தன்னை சுட்டவரை காப்பாற்ற பல கோர்ட் படிகளை ஏறி இறங்குகிறார் அந்த அதிசிய நபர்.

”World without hate" என்ற அமைப்பை உருவாக்கி இரக்கம் மற்றும் மன்னிப்பு ஆகியவையின் சக்தியை மக்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். வன்முறை, வெறுப்பு இல்லாத உலகமாக நம் உலகம்
இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அவர் பயணித்து கொண்டிருக்கிறார்.

அவருடைய எண்ணம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம். உலகம் அன்பால் நிறையட்டும்.

இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot