Sunday, June 18, 2017

ஜெயாவிற்கு உண்மையில் விஷம் வைத்தது யார்? திடுக்கிடும் தகவல்கள்

இது இரண்டாம் பகுதி. முதல் வீடியோவை மறக்காமல் பாருங்க.
லீங்க் டிஸ்கிரிப்ச்சனில் இருக்கிறது.

இந்த வீடியோவில் முதலில் ஒரு பிரபல ஆன்மீக குருவின் மரணத்தை பற்றி மிக சுருக்கமாக சொல்ல போகிறேன்.
அதுக்கு அப்புறம் அந்த மரணத்திற்கும் ஜெயலலிதா மரணத்திற்கும் என்ன ஒற்றுமை என்று சொல்ல போகிறேன். ஜெயலலிதாவிற்கு உண்மையில் விஷம் வைத்தது யார் என்று சொல்ல போகிறேன்.

1970 க்களில் பிரபலம் அடைந்த ஆன்மீக குரு ராஜ்னிஷ் ஓசோ.
1974 முதல் 81 வரை புனேயில் ஆசிரமம் நடத்தி வந்தார். 1981 முதல் 85 வரை அமெரிக்காவில் ஆசிரமம் நடத்தினார். அமெரிக்காவில் ஆரிகான் என்ற பகுதியில் 65,000 ஏக்கர் நிலத்தில்
ஆசிரமத்தை அமைத்து அங்கு ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்தார். அவரின் சித்தாங்களில் அமெரிக்க மக்கள் அதிகளவில் ஈர்க்கப்பட்டார்கள்.

அவர் அனைத்து மதங்களையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
மதங்கள் தான் மனிதனை மிருகம் ஆக்கியது, மதங்களை வைத்து அரசியல்வாதிகள் மக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் அடிமைகளாய் வைத்துள்ளார்கள் என்று முழங்கினார்.
குறிப்பாக அமெரிக்காவில் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் கிறிஸ்துவ மதத்தை மிகவும் கடுமையாக விமர்சித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மதவாதிகள் அரசாங்கத்தை ஏவி விட்டு, ஓஷோ மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தார்கள்.

12 நாட்கள் சிறையில் இருந்த பிறகு ஜாமீன் கொடுத்து விடுதலை செய்தார்கள். அந்த 12 நாட்களில் எந்த காரணமும் இல்லாமல் 6 சிறைகளுக்கு அவர் மாற்றப்பட்டார். கோர்ட்டில் ஜாமீன் கொடுத்த பிறகு, அங்கிருந்து நேராக அவர் விமான நிலையத்திற்கு கூட்டிட்டு போனாங்க. உடனடியாக இந்தியாவிற்கு விமானத்தில் அனுப்பி வைச்சிட்டாங்க. அமெரிக்காவில் அவர் ஆசிரமத்தையும் அழித்து விட்டார்கள்.

12 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு அவரின் உடல் நலம் படிப்படியாய் மோசமானது. தனது 58வது வயதில் இருதயம் செயலிழந்து இறந்து போனார். மருத்துவர்கள் அவர் உடலில் விஷம் இருப்பதை கண்டுப்பிடித்தார்கள். அமெரிக்க சிறையில் கதிர்வீச்சின் மூலம் அவருக்கு slow poison கொடுத்திருக்காங்க என்று ஓஷோ சொல்லியிருக்கிறார்.

இதே மாதிரி தான் ஜெயலலிதா மரணமும் நிகழ்ந்து இருக்கிறது.
27 செப்டம்பர் 2014 இல் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். 20 நாட்கள் சிறையில் இருந்த பிறகு, அவர் 17 ஆக்டோபர் அன்று ஜாமீனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறையில் இந்த கால கட்டத்தில் அவருக்கு ஒசோவுக்கு கொடுக்கப்படது போல் கதிர்வீச்சின் மூலம்  slow poison கொடுக்கப்பட்டிருக்கிறது. கர்நாட்காவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. எனவே இந்த செயலில் காங்கிரஸும் உடந்தை தான். ஜெயலலிதா இறந்தால், அதிமுக காணாமல் போய் விடும். கருணாநிதி இறந்தால், திமுக காணாமல் போய் விடும். பின்னர் தமிழகத்தில் காங்கிரஸ், பிஜேபி இருவருமே
கால் ஊன்றலாம் என்பதால் தான் காங்கிரஸும் பிஜேபியின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தார்கள்.

ஜெயலலிதாவின் உடல் நலம் சிறையில் இருந்த வந்த பிறகு மோசமாகி கொண்டே இருந்தது. தனது கடைசி ஆண்டில் சட்டசபையிலும், நிகழ்ச்சிகளுலும், தேர்தல் பிரச்சார மேடைகளிலும் ஜெயலலிதா உட்கார்ந்து கொண்டு தான் பேசினார்.
நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. நடப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டார்.

ஆர்.கே.நகரில் நடந்த நிகழ்ச்சியில் மேடைக்கு வருவதற்கே லிப்ட் அமைத்தார்கள். வீடியோ கான்பரசிங் மூலமாக உட்கார்ந்து கொண்டே தான் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையிட்டில் தண்டனையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு 23 மே 2015 இல் மீண்டும் முதல் அமைச்சராய் பதவியேற்றார். முன் எப்போதும் நடக்காத வகையில் அமைச்சர்கள் கூட்டாக பதவி பிரமானம் செய்து கொண்டார்கள். மொத்த பதவியேற்பு விழாவும் வெறும் 27 நிமிடங்களில் முடிந்தது. ஜெயலலிதாவால் அதிக நேரம் உட்கார முடியாது என்பதால் தான் அந்த ஏற்பாடு செய்தார்கள். 2016 மே மாதம் தேர்தலில் வென்ற பிறகு நடந்த பதவியேற்பு விழாவும் இப்படி தான் நடந்தது.

இப்படி ஜெயலலிதாவின் உடல்நிலை படிபடியாக மோசமடைந்து செப்டம்பர் 22 இல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 5 இல் இதயம், நுரையீரல் உட்பட பல உறுப்புகள் செயலிழந்து போனதால் மரணம் அடைந்தார்.

சிறை சென்று வந்து பிறகு இரண்டே ஆண்டில் ஜெயலலிதா மரணம் நிகழ்ந்தது. சிறை செல்லும் முன் ஆரோக்கியமாய் இருந்த ஜெயலலிதாவின் உடல்நலம் அடுத்த இரண்டு ஆண்டில் எப்படி இவ்வளவு மோசமாய் போனது என்று கேள்வி எழுகிறது. அந்த கேள்விக்கு பதிலாய் சிறையில் கதிர்வீச்சின் மூலம் slow poison கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற பதிலும் நமக்குள் எழும்.

2012 டெகல்கா நாளிதழில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் ஜெயலலிதாவை விஷம் வைத்து கொல்லப்பார்க்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டார்கள். இதன் உண்மையான பிண்ணனி என்ன? இதற்கு பின்னால் மோடியின் சதித்திட்டம் இருந்ததா?

இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் இருக்கிறது. திட்டமிட்டு உண்மையை நம்மிடம் மறைத்து தவறான தகவலை திணித்து இருக்கிறார்களா என்ற சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்தும்.
ஒரிரு தினங்களில் அடுத்த வீடியோவில் சந்திக்கிறேன். உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot