”அலுவலகத்தில் நிறைய வேலை. அதிகமாக யோசிக்க வேண்டி இருக்கு. எப்பவுமே ஒரு பரப்பரப்பா இருக்கு, பயமா இருக்கு. மன அமைதியே இல்லை. வீட்டுக்கு வந்தா, வாழ்க்கை துணைக்கிட்ட திட்டு வாங்க வேண்டியதா இருக்கு. இந்த வாழ்க்கையில் மன அமைதி என்பது எட்டா கனியாக இருக்கே. தியானம் பண்ணா மன அமைதி கிடைக்கும்னு சொல்றாங்க. ஆனா தியானம் கத்துக்கலாம்னு சாமியாருங்க கிட்ட போனா, நம்ம பணத்தை பறிக்கறதுல தான் அவங்க ஆர்வமா இருக்காங்க. மன அமைதி இல்லாம இப்படியே வாழ்க்கை போய்க்கிட்டு இருந்தா, என்னோட கதி என்னதாங்க ஆகறது” அப்படினு உங்களுக்கு கவலையா இருக்கா?
கவலையை விடுங்க. பைசா செலவு இல்லாம நான் உங்களுக்கு தியானம் சொல்லித்தரேன். ரொம்ப ஈசியான தியானம். கண்டிப்பாக உங்களால் செய்ய முடியும். இந்த வீடியோவை பாருங்க. உங்களுக்கு தியானம் செய்வது பிடிக்க ஆரம்பிக்கும். உங்களுக்கு மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
No comments:
Post a Comment